இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்த்தையடுத்து மேலும் ஒரு இடத்தில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என குண்டு வெடித்தது.
3 தேவாலயம், 3 நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் உயிரிழந்தவர்களின் எணிக்கை 156_ஆக அதிகரித்துள்ளது.மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து சிகிச்சை வருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பு சம்பத்தால் கொழும்பில் பதட்டம் நீடித்த நிலையில் 7_ஆவதாக ஒரு குண்டு வெடித்து பெரும் பதட்டத்தை எற்படுத்தியுள்ளது. இலங்கையின் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த 7_ஆவது குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.