Categories
தேசிய செய்திகள்

ஆதரவற்றோர் காப்பகத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!!

ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேரளா மாநிலத்தின் கோட்டையம் மாவட்டத்தில் சாந்த்வனம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் வர்கீஸ் என்பவன் அங்கு தங்கியுள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 வயது சிறுமியை வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அரசு அலுவலர்களிடம் புகார் கொடுத்தார்.. ஆனால், அலுவலர்கள் அந்தசிறுமியின் புகாரை பெரிதாக எடுக்கவில்லை.. அதாவது செவிசாய்க்கவில்லை.. இதனால், மனமுடைந்து போன சிறுமி குழந்தை நலக்குழு அலுவலர்களிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து குழந்தை நலக்குழு அலுவலர்கள் அந்தசிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், பல பெண்கள் உட்பட, அந்த சிறுமியையும் வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியது தெரியவந்தது. இருப்பினும், வர்கீஸ் இதுவரை கைது செய்யப்படவே இல்லை.. மேலும்,  சம்பவத்திற்குப் பிறகு, சிறுமிகள் வேறொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |