கடலூர் மாவட்டம், தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெர்மல் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர் தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , இந்த தகராறின் காரணமாக ஜெய்ஹிந்த் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,மேலும் தற்கொலை தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.