வேலூரில் கணவரை பொய் புகாரின் பேரில் கைது செய்ததாக மனைவி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தலைவர் கஜா என்ற கிருஷ்ணமூர்த்தி வியாபாரிகளுக்கு கடை அமைப்பதற்காக தன்னிச்சையாக அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனால் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி அவரது மகள் மற்றும் உறவினர்களுடன் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்துள்ளதாக காவல் நிலையத்திற்கு திரண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து கணவர் மீதான நடவடிக்கையை கண்டித்து மனைவி காவல்நிலையம் முன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.