Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன் கண் எதிரே…. தந்தைக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மகன் கண் எதிரே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவராக நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், தாமரைசெல்வன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நடராஜன் தனது மகன் தாமரைசெல்வனுடன் செந்தாரப்பட்டி ஏரிக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது நடராஜன் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். அங்கு அருகில் இருந்த மகன் தாமரைச்செல்வனுக்கு  நீச்சல் தெரியாததால் தந்தையை காப்பாற்ற முடியாமல் நின்றுள்ளார்.

இதனால் நடராஜன் தண்ணீரில் கதறியபடி மகன் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |