தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பொது மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம் ஜாதி குறித்து தவறாக பேசுவோ கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து பேசுவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது. அதனை தொடர்ந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறைகள் ஆகிய வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மேற்கொள்ள வேண்டும். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து இரண்டு நாட்களாக சென்னை தாம்பரத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் காரியாலத்தில் இது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில் நேற்று குறிப்பிட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. எனவே நாளை 44 இடங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணியை ஒத்திவைப்பதாக அந்த அமைப்பு தனது தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளது .சமூக வலைதளங்களில் பேரணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.