Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரமா?….. நச்சுனு பதில் அளித்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழக மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-2023 ஆம் ஆண்டில் மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து 6 லட்சம் டன்கள் நிலக்கரியை டன் ஒன்றுக்கு 143 டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்ய உத்தரவு வழங்கியது.

அதனை தொடர்ந்து முதல் காலாண்டில் எஞ்சிய 1.3 லட்சம் டன் நிலக்கரியை மத்திய அரசின் மூலம் டன் ஒன்றுக்கு 23 டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்து தர தமிழக அரசு கேட்டுக் கொண்டது. வருகின்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலக்கரி தேவையை ஈடு செய்யும் வகையில் 7.3 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யும் வகையில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. அதன் பிறகு விலை புள்ளிகள் திறந்து எதிர்மறை விலைப்புள்ளிகள் மூலம் முடிவு செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட பின் நிலக்கரி வந்து சேர குறைந்தது 45 நாட்கள் தேவை. எனவே தற்போது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகளின் மூலம் பிப்ரவரி மாதம் தான் நிலக்கரி பெற முடியும். மேலும் ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யும் நேரத்தில் நிலக்கரி தேவை, இரும்பு மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |