Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 12, 13 ஆம் தேதிகளில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்குகாக பேருந்து நிலையம் கூட்டங்கள் அதிககமகா கூடும் என்பதால்  கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறும் போது, வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் மக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் தாம்பரம், பூவிருந்தவல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

அதன்படி தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து போளூர் ,சேத்பட்டு, வந்தவாசி,செஞ்சி திண்டிவனம், பண்ருட்டி,நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோயில்,புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர்,ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி,மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு ,ஊட்டி, ராமநாதபுரம்,சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால் பொதுமக்கள் பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்தி கட்டாய முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |