Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் திறக்கப்படுகின்றன. மேலும் பாரில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கை கழுவும் வசதியும், சானிடைசர்களும் இருக்க வேண்டும் என கூறியுள்ளது. தமிழக அரசு வைத்துள்ள இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் இன்று முதல் திறக்கப்பட உள்ளன

Categories

Tech |