ராம் ஜென்ம பூமியைப் போல் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரமும் தற்போது தலைதூக்கி உள்ளது.
மதுராவில் உள்ள மசூதிகளை இந்துக்களுக்கு விட்டு தர வேண்டும் என அகில இந்திய சாதுக்கள் சபை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து விவாதிக்க அகில இந்திய சாதுக்கள் மதுராவில் அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி கூடுகிறது. அந்த சபையின் தலைவர் மகேந்திரா நரேந்திர கிரி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரத்தை எப்படி எடுத்து செல்வது என்பது குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மதுரா நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.