தகராறில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பரமசிவன் மீண்டும் குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து குமார் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமசிவனை கைது செய்துள்ளனர்.