Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாத்தா செய்யற வேலையா இது… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த செயல்… தாயின் பரபரப்பு புகார்…!!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தங்கப்பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகனும், திருமணமான ஒரு   மகளும் உள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கப்பாண்டி தனது மகளை பார்ப்பதற்கு அவரின் ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தங்கபாண்டி அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதித்த 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்நிலையில் அந்த சிறுமி திடீரென வீட்டில் மயக்கம் போட்டு கீழே விழுந்ததை பார்த்த அவரின் தாயார் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கின்றார் என்று தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுபற்றி . தங்கபாண்டியிடம் கேட்டுள்ளார். அதற்கு தங்கபாண்டியன் மகள் மற்றும் மகன் ஆகிய இருவரும் இணைந்து இதுகுறித்து  வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர் தங்க பாண்டியை கைது செய்து விட்டனர். மேலும் காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்ற  தங்கபாண்டியின் மகன் மற்றும் மகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |