வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதற்கு தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவடி கிராமம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா அரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என இவரது தாய் திட்டிய காரணத்தினால் விமலா அரசி மன உளைச்சலில் விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விமலா அரசி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு போய் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.