Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மீண்டும் எல்லையில் பதற்றம்… லடாக்கில் 40,000 வீரர்களை குவித்துள்ள சீனா..!!

ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் 40,000 ராணுவ வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.

இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்..  சீன தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புகொண்டது.. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை ஹாட் ஸ்பிரிங், (hot spring) கோக்ரா (gogra) பகுதிகளில் நடைபெற்றுவந்தது. ஆனால், பிங்கர் 5  (Finger 5) பகுதியிலிருந்து தங்களது படைகளை திரும்பப்பெறாமல் சீனா மறுத்துவருகிறது. பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தான் இறுதிகட்ட பேச்சுவார்த்தையை இரு நாட்டு உயர்மட்ட ராணுவ வீரர்களும்  நடத்தினர். இருப்பினும், ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர்கள் இருந்த சிரிஜப் (Sirijap) பகுதிக்கு செல்லாமல், பிங்கர் 5 பகுதியிலேயே நிலை கொண்டுள்ளனர்.. ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் கூடாரங்களை அமைத்துவருகின்றனர். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

Categories

Tech |