Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திரளான பக்தர்கள் கலந்து கொண்ட திருவிழா…. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்…. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தரிசனம்…!!

மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கோஷங்களை எழுப்பினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடந்த 21ஆம் தேதி மேல திருப்பதி என்று போற்றப்படும் மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி விட்டது. இந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா என நிகழ்ச்சிகள் களைகட்டியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் திருத்தேரில் எழுந்தருளும் ரத தரிசனம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மதியம் 12:3௦ மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து, கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்பினர். இந்நிலையில் பரிவேட்டை குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதனைத் தொடர்ந்து சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கவிருக்கிறது. அதன்பின் சனிக்கிழமை மகா தரிசனம், மஞ்சள் நீராடுதல், மகா திருமஞ்சனம், கொடி இறக்குதல், மகா தீபாரதனை போன்றவையுடன் நிகழ்ச்சியானது நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |