நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் பாலுசாமி மற்றும் அவருடைய மனைவி பாண்டி மீனா வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பாலுசாமி சைக்கிளில் டீ விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மூன்றாவது மகள் சங்கரியை வீடு வேலை செய்யவில்லை என அவருடைய தயார் மீனா கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கரி(16) வீட்டின் அறையின் உள்ளே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து பதறிய பெற்றோர் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.