Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடல் நலக்குறைவால் அவதி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நல குறைவால் மனமுடைந்த ஆசிரியல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளங்காக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ்குமார் ராமநாதபுரம் தேவேந்திர நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் உடல்நல குறைவால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாழ்வில் விரக்தி அடைந்த அவர் அப்பகுதியல் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வைத்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சுரேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக சுரேஷ்குமார் உயிரிலந்துளர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |