அக்ஷய் குமார் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
பிரபல நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்றுத் திரைப்படம் ”சாம்ராட் பிருத்விராஜ்”. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் இன்று ரிலீசாக உள்ளது. பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அக்ஷய்குமார் பிரித்திவிராஜ் சௌகானாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மனுஷி சில்லர் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இவர் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று லக்னோவில் திரையிடப்பட்டது.
இந்த படத்தை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்தார். இந்த படத்தை பார்த்த பிறகு இவர் படக்குழுவை பாராட்டினார். அவர் இந்த திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கு அளிப்பதாக தெரிவித்தார்.