Categories
உலக செய்திகள்

தனி ஒருவன் செய்த செயல்…. நகரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு…. பிரபல நாட்டில் பதற்ற நிலை …!!!

ஒரே மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரிசோனா மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து  உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறும்போது ,”ஒரு தனிநபர் மட்டுமே  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசோனா மாகாணத்தில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு இருக்கிறார் .

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து  விசாரணை நடத்தியதில் அவர்  துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதை  ஒப்புக்கொண்டார்.மேலும் அரிசோனா மாகாணத்தில் பியாரியா நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் பிராண்டன் ஷெப்பெர்ட் கூறுகையில், “எங்கள் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர்  படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |