Categories
தேசிய செய்திகள்

தமிழக தேர்தல் முடிவு வெளியீடு… திமுக கூட்டணி முன்னிலை…. உற்சாகம்….!!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு என்ன பட்டு வருகின்ற நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், அ.ம.மு.க. கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் என எதிரெதிரே போட்டிகள் நடைபெற்றது. தேர்தல் நடத்தப்பட்ட 234 தொகுதிகளுக்கும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு முறையில் வைத்திருந்தன.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் என்ன பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் நிற்கிறது. தற்போது 231 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளிவந்துள்ளது. அதில் 118 இடங்களை விட அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 132 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் 99 தொகுதிகளிலும் ஏறத்தாள 33 தொகுதிகளில் வித்தியாசத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து முன்னிலையில் வருகின்றன. இதனால் திமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இதைப் போலவே அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் வகிக்கின்றனர்.

Categories

Tech |