Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தல்சானிக் போட்டி”…. பங்கு பெற்ற முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர்….. பாராட்டு தெரிவித்த கல்லூரி முதல்வர்….!!!!

வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் தேசிய அளவில் 17 என்.சி.சி இயக்குனரகங்களுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற தல்சாணிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் அடங்கிய இயக்குனரகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு மாணவரின் பங்கு அதிகம் உள்ளதால் அவரை கல்லூரி முதல்வர் மலர், என்சிசி ஆடும் ஆபிசர் சுந்தரம், தேசிய மாணவர் படை அலுவலர் பரசுராமன், துறை தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

Categories

Tech |