பேசியே குடும்பப் பெண்களை கவிழ்த்து 3 கோடி வரை சுருட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கயல்விழி தம்பதியினர், அவர்கள் இருந்த பகுதியில் தாங்கள் வங்கியில் பணி புரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்களை வாங்கிய அதை பாதி விலைக்கு தருவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் 3 கோடி வரை பணம் வசூல் செய்துள்ளனர்.
தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையை கொடுக்கலாம் என கூறி அடகு கடை வைத்திருந்த தங்களது கூட்டாளி அகில் என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பி பல குடும்பப் பெண்கள் சுமார் 500 பவுன் நகைகளை அகிலிடம் கொடுத்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் மாணிக்கம் கயல்விழி மற்றும் அகில் மதுரைக்கு தப்பியுள்ளனர். இதேபோல பலரையும் ஏமாற்றி உள்ளனர்.
மதுரையிலும் பாதிக்கப்படுவார்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே அங்கிருந்தும் தப்பிச் சென்றுள்ளனர். 7 மாதங்களுக்கு முன்பு காரைக்குடி காவல் நிலையத்தில் இவர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையிலான தனிப்படையினர் மூவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் மாணிக்கம் மற்றும் அவரின் மனைவி கயல்விழி கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளி அகிலை போலீசார் தேடி வருகின்றனர்.