ஆப்கானிஸ்தான் நாட்டில் சோதனையின் போது நிற்காமல் சென்ற பெண் மருத்துவரை தலிபான்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்களது ஆட்சி கொடூரமாக மாறிவருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாவட்டத்தில் தலிபான்கள் சோதனைச்சாவடி ஒன்றை அமைத்து, அந்த பாதை வழியே சென்ற வாகனங்களை சோதனை செய்து வந்தனர்.
அப்போது, சமீபத்தில் திருமணமான 33 வயது பெண் மருத்துவர் அந்த வழியாக சென்றபோது, தலீபான்களின் சோதனைச்சாவடியில் நிற்கவில்லை. எனவே, தலிபான்கள் அவரை இரக்கமின்றி நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.