ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் […]
