குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொரவி காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழுதாவூர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை […]
