மாயமான வாலிபரை மீட்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பூ வியாபாரியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் உள்ளார். கடந்த 5-ஆம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெகதீஷ் திரும்பி வரவில்லை. இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜெகதீசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் […]
