கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை செல்லும் சாலையில் இருக்கும் முனியப்பன் கோவில் அருகிலுள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு இளம் பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மேலே […]
