விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், கவி மற்றும் ஜெகதீஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலிகால் பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு இவர்கள் புத்தாண்டை கொண்டாட வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீஷ் கால் தவறி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்துள்ளார். […]
