50 லட்ச ரூபாய் கேட்டு 2 பேர் ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராம்குமார் என்ற வாலிபர் இவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் தொகையை திருப்பித் தருவதாக கூறி காளிமுத்துவை ராம்குமாரும், அவரது நண்பர்களும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். […]
