வீட்டிலிருந்தேபடியே பணிபுரிவது நன்றாக உள்ளதாக ஐடி நிறுவன ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் வெளியே சென்று வேலை பார்த்த அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கடந்த மாத இறுதியில் இருந்தே வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். […]
