சென்னை மாநகரத்தின் அரசியல், கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா இன்று காலமானார். சென்னையில் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டு முத்தையாபிறந்தார். இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். இவர் 1951-ம் ஆண்டு டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக […]
