குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான நீராதாரமாக ரேலியா அணை, விளங்கி வருகிறது .இதில் தற்போது 32 அடிக்கு நீர் குறைந்துள்ளதால் , 4 தடுப்பணைகளில் இருந்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த அணைகளிலும் , போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. […]
