உரிய சம்பளம் வழங்கப்படாததால் கூலிதொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆழாங்கால் மழவராயனூர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்குகின்றனர். இந்நிலையில் கோபமடைந்த கூலி தொழிலாளர்கள் பணியினை புறக்கணித்து ஆழாங்கால் மெயின் ரோட்டில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சம்பளத்தை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என […]
