Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் பணியாளருக்கு ரூ1௦௦௦…. எப்படி கொடுக்குறாங்க தெரியுமா ?

கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக  1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… டிரக் மீது மோதிய பயணிகள் வாகனம்… “5 பேர் பலி”… 11 பேர் படுகாயம்..!!

உ.பியில் இன்று காலை பயணிகள் வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பீகாரிலிருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, ​​இன்று அதிகாலை 5:30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் அருகே சோகம்… அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி..!!

வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

உற்பத்தியை அதிகரிக்க….. 6 மாநிலங்களில் புதிய சட்டம்…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணிநேரம் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டுமென சட்டம் இயற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு போராடி இரத்தம் சிந்தி 8 மணி நேர வேலையை வாங்கினர். அதை கொண்டாடும் விதமாக மே 1 அன்று உலக அளவில் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலம் வந்து கொண்டாடுவது வழக்கம். இதனை இந்தியாவில் சட்ட மாமேதை டாக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

122 வருட பழமை வாய்ந்த பஞ்சாலை மூட அறிவிப்பு

புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சு ஆலையை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஏஎப்டி என்ற பஞ்சாலை. இந்த பஞ்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாதது  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை நஷ்டத்தை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

மின் ஊழியர் பணிநியமனத்தில் முறைகேடு புகார்

துறையில் மின்சார துறையில் கேங்மேன் பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் முறை பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நேரடி நியமனம் மூலம் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மின்கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளுக்கான உடற்கல்வி தேர்வில் தோல்வியடைந்த பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

தொழிலாளர்கள் அதிர்ச்சி …. மீண்டும் வேலையில்லா நாளை அறிவித்து டிவிஎஸ்…!!

ஓசூர், சென்னையில் இயங்கிவரும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாள்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.டிவிஎஸ் (TVS) குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் 5-ஆம் தேதி வழங்கப்படும்” பி.எஸ்.என்.எல் தலைவர்..!!

ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வரும் 5-ஆம் தேதி வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தலைவர் தெரிவித்துள்ளார்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப் படுவது வழக்கம். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் 2 வாரங்களுக்கு மேல் கடந்து தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கும்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தலைவர் பி.கே புர்வார் இது குறித்து பேசியதாவது, “வரும் 5-ஆம் தேதி ஊழியர்களுக்கு […]

Categories

Tech |