மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நகராட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி ஜெயராம்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூய்மைப்பணி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பைபாஸ் சாலையில் நடந்து சென்ற நபர் மீது இவரின் வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து வாசுதேவன் படுகாயமடைந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
