முகாமிற்கு அளிக்கப்பட்ட இடம் உதவியாக இல்லை எனக் கூறி பெண்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் ஒன்றியம் மேல் சின்னபள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில் முகாமுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது கட்டிட பணி நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து அந்த இடம் முகாம் மக்களுக்கு உதவியாக இல்லை எனக் கூறி […]
