தந்தை மகனை அழைத்து சென்றதால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், யாஷிஹன் மற்றும் யாஷிஹா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவருடன் கோவபட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் காளீஸ்வரி சென்று தங்கியிருந்துள்ளார். […]
