பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு விஷ ரசாயனம் தடவப்பட்டு வந்த கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.என அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். இவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் அக்டோபரில் ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தை இப்போது தான் பிரித்தது படித்ததாகவும் பிரக்யா எம்.பி. கூறி இருக்கிறார். […]
