அம்மை நோயால் தினமும் 45 ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடந்தான்குளம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 4, 5 ஆடுகள் பரிதாபமாக இறந்து விடுகிறது. இவ்வாறாக சந்திரனுக்கு சொந்தமான 53 ஆடுகளும், முத்துக்குமாருக்கு சொந்தமான 40 ஆடுகளும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது. […]
