மதுபான கடைகள் விடுமுறை நாளில் மதுபானத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மக்களவை தேர்தல் நாளில் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய முறையில் தகவல் கிடைத்தது. காவல்துறை அதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் சட்டவிரோதமாக பதுக்கி மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை […]
