திம்பம் சாலையில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் […]
