யானை தனது குட்டியுடன் மலை ரயில் பாதையில் சுற்றி திரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியார் பகுதியில் கடந்த வாரம் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த கூட்டத்திலிருந்து பெண் காட்டு யானை தனது ஒரு மாத குட்டியுடன் பிரிந்தது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு இடையே காட்டு யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிகிறது. இந்த காட்டு யானை குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துவதால் ரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே […]
