காட்டு பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அதிகாரி செல்வராஜுக்கு காளம்பாளையம் பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வைத்து திருமூர்த்தி, மாரிசாமி என்ற 2 வாலிபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் காட்டு பன்றியை வேட்டையாடிப் தனது உறவினர்களுடன் இணைந்து சமைத்து […]
