கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கணவனை மனைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவி வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா தாக்கம் ஏற்பட்டு விடுமோ […]
