தகராறு செய்ததால் மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குட்டிதின்னி கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜாங்கம் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த விஜயராணி கத்தியால் தனது கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
