இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் உடலை அந்நாட்டு இராணுவம் வெள்ளைக்கொடி காட்டி மீட்டுச் சென்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்து , இந்திய நாட்டுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை […]
