தேசிய அளவிலான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். 25ஆவது தேசிய அளவிலான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் 49 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டியில் மனிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்றார். இதில், ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், க்ளின் அண்ட் ஜெர்க் முறையில் 115 கிலோவும் என மொத்தம் […]
