சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளத்தில் இருந்து எல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மோதலில் உயிர்பலி அதிகம் ஏற்பட்டதால் இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளிடையே முயற்சிகள் நடந்து வருகின்றது. […]
