தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், திருப்பூண்டியில் தலா 8 செ.மீட்டரும், நாகப்பட்டினம், குடவாசலில் தலா 6 செ.மீட்டரும், திருத்துறைபூண்டியில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் சில இடங்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும் […]
