குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகருக்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக எமரால்டு அணையிலிருந்து பெரிய குழாய்கள் சாலையின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அழுத்தம் ஏற்பட்டதால் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகியுள்ளது. மேலும் […]
